திருவள்ளூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்…!

திருவள்ளூர்.ஆக.06., திருவள்ளூர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட செயலாளர் SM.நாசர் தலைமையில் நடைப்பெற்றது.மாவட்ட பொருளாளர் ஜாஃபர் அவர்கள் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணைச்செயலாளர் புதுமடம் அணீஸ் அவர்கள் பங்கேற்று கட்சியின் வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தின் முடிவில் கட்சியின் வளர்ச்சி மற்றும் நிர்வாக வசதிக்காக திருவொற்றியூர் பகுதியை மேற்கு,கிழக்கு என்று இரண்டாக பிரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு கிளை சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி நடத்துவது என்றும் மாவட்டம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் நிஜாம்,திருவொற்றியூர் பகுதி செயலாளர் கதிர் உசேன்,பகுதியை சார்ந்த ஜீலானி,ரஃபி,ராஜா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவள்ளூர்_கிழக்கு